நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி! | Youths who escaped after sexually harassing them; Student chased after them on a bike with her father

Spread the love

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று மாலையில் டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள், அந்த மாணவியை வழிமறித்து அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாணவி அருகில் வந்து விசாரித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

மாணவி விவரத்தைக் கூற, அந்த 2 இளைஞர்களையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் பைக்கில் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த மாணவியின் தந்தையும், அந்த மாணவியும் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அவர்களிடம் சிக்காமல் இருக்க 2 இளைஞர்களும் பைக்கில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். களக்காட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மாவடி பகுதியில் சென்றபோது 2 இளைஞர்களின் பைக்கை முந்திச் சென்று தடுத்து நிறுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *