கத்திக் குத்தில் பலத்தக் காயமடைந்த மாயாண்டி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லதாவைக் கைது செய்தனர். அத்துடன், மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய மகனை பெற்ற தாயே கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.