நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்கும் பணி: செங்கை மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு | Determining moisture content for paddy procurement

Spread the love

செங்கல்பட்டு: நெல் ஈரப்​ப​தம் குறித்து ஆய்வு செய்​வதற்​காக தமிழகம் வந்த 3 மத்​தி​யக் குழு​வில், ஒரு குழு செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தங்​களது ஆய்​வுப் பணியை நேற்று தொடங்​கியது. மற்ற குழு​தங்​களது பணி​களை இன்று அந்​தந்த மாவட்​டங்களில் தொடங் குவார்​கள் எனத் தெரிகிறது.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ள​தால், நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 22 சதவீத​மாக உயர்த்த வேண்​டும் என மத்​திய அரசை தமிழக அரசு வலி​யுறுத்​தி​யது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்​தில் ஆய்​வுப் பணிகளைமேற்​கொள்​வதற்​காக மத்​திய உணவு துறை​யின் உயர் அதிகாரிகள் தலைமையில் தலா 3 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதன்​படி முதல் குழு நேற்று செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ஆய்வு மேற்கொண்டது. இதில் உணவு பாது​காப்​புத் துறை உதவி இயக்​குநர் ப்ரீத்தி தலை​மை​யில் 2 தொழில்​நுட்ப வல்​லுநர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். அவர்​கள் திருக்​கழுகுன்​றம் வட்​டம் கீரப்​பாக்​கம், திருப்​போரூர் வட்​டம் ஒரகடம், மது​ராந்​தகம் வட்​டம் படாளம் மற்றும் எல்​.என்​.புரம், செங்​கை வட்​டம் வில்​லி​யம்​பாக்​கம் ஆகிய பகு​தி​களில் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா முன்​னிலை​யில் ஆய்வு செய்​தனர். இதில் நெல்​லின் ஈரப்​ப​தம் அதி​க​மாக இருப்​பதை கண்​டறிந்​தனர்.இந்த ஆய்​வின்போது வேளாண்​மைத் துறை அலு​வலர்​கள் உடனிருந்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *