நேரடி பணி நியமனத்​தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: கே.என்.நேரு | minister kn nehru says no irregularities in maws recruitment

1381433
Spread the love

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் நேரடி நியமனத்​தில் எந்த முறை​கேடும் நடக்​க​வில்​லை. அரசியல் உள்​நோக்​கத்​தோடு அவதூறு பரப்​புவதாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திமுக அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த வேண்​டும் என்ற அரசி​யல் உள்​நோக்​கத்​தோடு, பல ஆண்டு காலத்​துக்கு முந்​தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்​து, அதை ஊதிப் பெரி​தாக்​கும் முயற்​சி​யில் மத்​திய அரசின் அமலாக்​கத் துறை தோற்​றுப்​போனது. அதன் தொடர்ச்​சியாக, தற்​போது மேற்​கொண்​டுள்ள முயற்​சி​தான் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின் பணி நியமனம் குறித்த நேற்​றைய கடிதம்.

2,569 பணி​யிடங்​களை நிரப்ப அண்ணா பல்​கலைக்கழகம் மூலம் கடந்த 2024 பிப்.2-ம் தேதி அறி​விப்​பாணை​கள் வெளி​யிடப்​பட்​டன. இதற்கென தனி இணை​யதளம் உரு​வாக்​கப்​பட்​டு, அதன்​மூலம் 2 லட்​சத்து 499 விண்​ணப்பங்​கள் பெறப்​பட்டன. பின்னர் பல்கலைக்கழகத்தால் தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டு, தகுதி அடிப்​படை​யில் அதிகாரி​களைக் கொண்ட குழுக்​கள் சான்​றிதழ் சரி​பார்ப்​பு, நேர்​காணல் நடத்​தி, மதிப்​பெண், இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் கலந்​தாய்வு முறை​யில் 2,538 பேர் தேர்​வாகினர்.

இந்த நேரடி நியமனம் குறித்து தொடரப்​பட்ட பல்​வேறு வழக்​கு​கள், தடை​யாணை​களை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஜூலை 4-ம் தேதி ரத்து செய்த நிலை​யில், இறுதி தேர்​வுப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

இந்த நிலை​யில், இதற்கு களங்​கம் கற்​பிக்​கும் வகை​யில், அமலாக்​கத் துறை மூல​மாக மத்​திய அரசு இத்​தகைய அரசி​யல் நடவடிக்​கையை மேற்​கொண்​டுள்​ளது.

முந்​தைய ஆட்​சி​யிலும் 2012, 2013, 2014, 2015, 2017-ல் பல்​வேறு பதவி​களுக்கு இதே அண்ணா பல்​கலைக்கழகம் மூல​மாக தேர்​வு​கள் நடத்​தி, பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டன. அரசி​யல் நோக்​கத்​தோடு மேற்​கொள்​ளப்படும் இது​போன்ற முயற்​சிகள் கண்​டிக்​கத்​தக்​கது. அதை முறியடிக்க சட்​டப்​பூர்வ நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *