இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, “சில கதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, அவை நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் அத்தகைய ஒரு கதை.
நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டிய கதை இது. இது வெறும் திரைப்படம் அல்ல. இது ஒரு வெளிப்பாடு.
ஒரு நாடு இத்தகைய பெரிய நிகழ்வுகளைச் சந்திக்கும் போது, அவற்றை உண்மையாக ஆவணப்படுத்துவது முக்கியம்.” எனக் கூறியிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “இது வெறும் திரைப்படம் அல்ல.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழி வாங்கியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானைத் தண்டித்ததோடு, நவீன போரில் தன் வலிமையை நிரூபித்துள்ளது.” எனக் கூறியிருக்கிறார்.