தீர்வு: பல்வகை முதலீடு
ஒரே ஃபண்ட், ஒரே பிரிவு, ஒரே பாணி – இதெல்லாம் அதிக ரிஸ்க் ஆகும்.
அதாவது லார்ஜ்கேப் ஃபண்ட் (நிலைத்தன்மை) மிட்கேப் ஃபண்ட் (வளர்ச்சி). ஸ்மால்கேப் ஃபண்ட் (அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம்) ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (பலபிரிவு மாற்றத்திற்கேற்ப முதலீடு) எனப் பிரித்து முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெற முடியும்.
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு..!
1. கடந்த 6 மாதம் அல்லது 1 ஆண்டு அல்லது 2 ஆண்டு அல்லது 3 ஆண்டுகளில் சிறந்தது என்ற காரணத்தால் ஃபண்ட் வாங்காதீர்கள்.
2. செயல்திறனைத் துரத்தும் முதலீடு பெரும்பாலும் உச்சத்தில் வாங்க வைக்கிறது.
3. பிரிவு + பாணி இரண்டிலும் பல்வகை அவசியம்.
4. எஸ்.ஐ.பி தவணை முதலீடு + நீண்டகால அணுகுமுறை தான் சிறந்த பாதுகாப்பு.
5. ஃபண்ட் தேர்வில் தொடர்ச்சி, ரிஸ்க் எடுக்கும் திறன், சொத்து ஒதுக்கீடு முக்கியம் ஆகும். டாப் ஃபண்ட் என்பது முக்கியம் அல்ல.
டாப் ஃபண்ட் என்பது ஒரு மாயை ஆகும். நீண்ட கால செல்வம் உருவாக்க, சமீபத்திய வெற்றியைத் துரத்தாமல்,சீரான, பல்வகைப்பட்ட முதலீட்டு அணுகுமுறை தான் உண்மையான வெற்றி.