நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்: ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ₹77.50 லட்சம் நிதியுதவி வழங்கிய GRT ஜுவல்லர்ஸ் | GRT Jewellers csr controbution to chennai anandhan trust

Spread the love

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, சமூகப் பொறுப்பிற்கான தனது நீடித்த அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அன்பு, அக்கறை மற்றும் சமூக நலன் ஆகிய மதிப்பீடுகளில் வேரூன்றிய இந்த நிறுவனம்; வாழ்க்கைகளை உயர்த்துவதிலும், தேவைப்படுவோருக்கு துணையாக நிற்பதிலும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த உறுதிபாடான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, சென்னையின் அம்பத்தூரில் அமைந்துள்ள ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு, நோய்த்தடுப்பு சிகிச்சை மையம் கட்டுவதற்காக ரூ.77.50 லட்சம் நிதி உதவியை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் வழங்கியுள்ளது. இந்த முயற்சி, இறுதிக் கட்ட நோயாளிகளுக்கும்; பொருளாதார ரீதியாக பின்தங்கிய நோயாளிகளுக்கும், வாழ்க்கையின் மிக நுணுக்கமான கட்டங்களில் முழுமையான பராமரிப்பை உறுதி செய்யும் வகையில், ஆறுதல், மரியாதை மற்றும் கருணைமிக்க மருத்துவ ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை மையம், வலியைக் குறைப்பது, மனநல ஆதரவு வழங்குவது மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இந்த பங்களிப்பின் மூலம், ஒரு சிகிச்சையைத் தாண்டி, கருணை, மரியாதை மற்றும் ஆறுதலை வழங்கும்; ஒரு வெற்றிடத்தை பூர்த்திசெய்து ஒரு நம்பிக்கையை உருவாக்குவதை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சி குறித்து பேசிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். “ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில், எங்கள் பொறுப்பு – வணிகத்தைத் தாண்டியது என்று நாங்கள் நம்புகிறோம். அதீத ஆதரவு தேவைப்படும் நேரங்களில் மக்களுடன் இருப்பது எங்களுக்கு உண்மையாகவே முக்கியம். நோய்த்தடுப்பு சிகிச்சை என்பது சிகிச்சையையும் தாண்டி, நோயாளிகளுக்கு ஆறுதல், மரியாதை மற்றும் பராமரிப்பையும் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், கடினமான காலங்களில் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிம்மதியும் ஆறுதலும் அளிக்கும் ஒரு அறக்கட்டளையான ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தோம்” என்றார்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் இது குறித்து கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைக்கும் நம்பிக்கை, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சமூக முயற்சிக்கும் ஊக்கமாக உள்ளது. ‘நம் சமூகத்திற்கு திருப்பி வழங்குவது’ என்பது எங்கள் பயணத்தின் ஓர் அங்கமாகும்; மேலும், வணிக நிறுவனங்கள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் நலனுக்காக ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை இந்த வலிமையான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்றார்.

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; கைவினைத் திறன், வடிவமைப்பு மற்றும் காலத்தால் மாறாத மதிப்பீடுகளுக்காக அறியப்படும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றில் உலகளாவிய கலெக்ஷன்களுடன், தற்போது தென்னிந்தியாவில் 65 ஷோரூம்களையும், சிங்கப்பூரில் ஒரு கிளையுடன் இந்த நிறுவனம் தனது பொன்னான சேவைகளை செய்து வருகிறது. தற்போது நகை விற்பனையையும் தாண்டி, சுகாதாரம், நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் சமூக முயற்சிகளில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *