“பகவந்த் கேசரி’ படத்தின் முக்கியக் கருவை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள்!” – அனில் ரவிபுடி |”They have made ‘Jananayagan’ based on the main theme of the film ‘Bhagavant Kesari’!” – Anil Ravipudi

Spread the love

அப்போது இயக்குநர் அனில் ரவிபுடி பகிர்கையில், “‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் முக்கியக் கருவை மட்டும் வைத்து விஜய் சாரின் ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் 20 நிமிடங்கள், இண்டர்வெல் காட்சி மற்றும் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் மட்டும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் இருந்தது போல இருக்கும்.

மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தின் விஷயங்கள், ரோபோ – சயின்ஸ் ஃபிக்ஷன் எலமெண்டுகளைச் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது புதிய ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குவதற்கான டிஸ்கஷன் முதலில் இயக்குநர் அனில் ரவிபுடியிடம்தான் நடந்திருக்கிறது.

ஆனால், இறுதியில் அது கைகூடி வரவில்லை. இது குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசும்போது, “இது விஜய் சாரின் கடைசி திரைப்படமாக இருந்தாலும், நான் ரீமேக் திரைப்படம் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்.

நான் அவரிடம் பல புதிய கதைகளைச் சொன்னேன். ஆனால், அவருக்கு ‘பகவந்த் கேசரி’தான் மிகவும் பிடித்திருந்தது” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *