மூளையில் உள்ள மொழி அல்லது பேசும் மையங்கள் பாதிக்கப்பட்டால் பேச்சுக் குறைபாடு ( Aphasia) ஏற்படும். இது பேச்சு, புரிதல், எழுதுதல், அல்லது வாசிப்பில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
ஸ்பீச் மற்றும் லாங்குவேஜ் தெரபி (Speech and Language Therapy), வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை மீண்டும் கற்றல், குடும்பத்தினருக்கான வழிகாட்டல், ஆப்ஸ், விஷுவல் க்யூஸ் (Visual Cues), டேப்லெட்டுகள் போன்ற சில தொடர்பு உதவிகளும் நிலைமையைச் சமாளிக்க கைகொடுக்கும்.
மூளை மின்னோட்ட ஊக்குவிப்பு (Non-invasive Brain Stimulation) போன்ற நவீன முறைகளும் உதவியாக இருக்கலாம். சிலருக்கு டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (Deep Brain Stimulation) சிகிச்சை தேவைப்படலாம்.

ஸ்ட்ரோக் ஏற்பட்ட 48 மணி நேரத்திலேயே பிசியோதெரபியைத் தொடங்கலாம். 72 மணி நேரத்தில் படுக்கையில் உட்கார வைக்க முயற்சி செய்யலாம்.
பெரும்பாலானோருக்கு ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில அசைவுகள் வரலாம். 2 முதல் 3 மாதங்களில் முன்னேற்றம் தெரியும். 2 முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து பயிற்சி செய்தால் இன்னும் முன்னேற்றம் தெரியும். சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகலாம்.
ஸ்ட்ரோக் தொடங்கி நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு வந்தால், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து கொடுத்து முழுமையாகச் சரி செய்ய வாய்ப்பு அதிகம். நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு வந்தால், மூளை திசுக்கள் (tissues) சேதமடைந்து, குணமாவது தாமதமாகும்.
ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்ட பார்வை மற்றும் பேச்சுக் குறைபாடுகள், பல நேரங்களில் பயிற்சி, மறுவாழ்வு மற்றும் மருத்துவ ஆலோசனையினால் குணப்படுத்தக்கூடியவையே.
நரம்பியல் நிபுணர் (Neurologist), ஸ்பீச் தெரபிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் மற்றும் கண் மருத்துவர் ஆகியோரை அணுகுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.