இரண்டு, இப்போது நிறைய இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால், அங்கே மின்சாரம் தான் இருப்பதில்லை.
இதை சரிசெய்ய மத்திய அரசு சார்ஜிங் ஸ்டேஷன்களை பராமரிக்கும் நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட நிதி ஒதுக்க வேண்டும்.
மூன்று, இந்தத் துறையில் தனியார் ஆபரேட்டர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற சலுகைகளும் செய்து தர வேண்டும். அப்போது தான், நகரங்கள் சீக்கிரம் மின்மயமாக்கப்படும்.

நான்கு, இப்போது இந்தியா – ஐரோப்ப ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இதில் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன.
அதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் ஏற்றுமதியை மட்டும் ஃபோக்கஸ் செய்யாமல், எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு உதவும் உதிரி பாகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மோட்டார்கள், கன்ட்ரோலர்கள் , BMS, சார்ஜர்கள், வாகன மென்பொருள் – இவை இந்தியாவின் வலிமை. இவற்றின் உற்பத்திக்கும் ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும்.
இது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறையை பிற நாடுகளுக்கு எடுத்து செல்லும்.