
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன் அடிப்படையில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13-ம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.