> 2020-ம் ஆண்டு, இவர் மத்திய பட்ஜெட்டை 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வாசித்தார். இது இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.
> இந்தியாவின் முழுநேர பெண் நிதியமைச்சர் என்கிற பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும். இவர் 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, இந்தப் பொறுப்பை ஏற்றார்.
தொடர்ந்து அதிக நாள்கள் நிதியமைச்சராக இருக்கும் பெருமையும் இவரையே சாரும். இந்தச் சாதனையை இவர் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றார்.
> பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் படி, பட்ஜெட் தாள்களை லெதர் சூட்கேஸில் கொண்டுவருவது வழக்கம். இதை மாற்றி, 2019-ம் ஆண்டு முதல், சிவப்புப் பட்டுத் துணியால் மூடி பட்ஜெட் தாள்களைக் கொண்டுவருகிறார் இவர்.
> 2021-ம் ஆண்டு, முதன்முறையாக பேப்பர் அல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதுவரை பட்ஜெட் அறிவிப்புகள் பேப்பரில் அச்சடிக்கப்பட்டுப் படிக்கப்படும். 2021-ம் ஆண்டு முதல், டேப்லெட்டில் இருந்து வாசிக்கப்படுகிறது.