பணம் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

Spread the love

பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்

பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார்.

அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ்.

பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ்.

பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. ‘என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ’ என்றும் விரட்டி விட்டாராம்.

தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே ‘சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்’எனச் சொல்லி விட்டாராம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *