சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதாரத் இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், தற்போது கிடைக்காத சலுகைகள், தனியாா் நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அவா்களுக்கு கிடைக்கும். அவா்களது பணிபாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி உறுதிசெய்துள்ளதால், அவா்கள் பணிக்குத் திரும்பவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு
