அதோடு, கட்சி தலைமை அவருக்கு சத்தீஷ்கரில் தேர்தல் பணியாற்ற வாய்ப்பு வழங்கியது. அந்தப் பணியை திறம்பட செய்து கட்சியை வெற்றி பெற வைத்தார். டெல்லியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை வெற்றி பெறச் செய்ததிலும் நிதின் முக்கிய பங்கு வகித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் பணியை நிதின் தான் முன்னின்று செய்தார்.

இது குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நிதின் கட்சி தலைவர்கள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி செயல்படுகிறார். அதேசமயம், தனக்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லையை மீறாமல் நடந்து கொள்வதில் கவனமாக இருக்கிறார். தனக்கு வழங்கப்படும் பணிகளையும் திறம்பட செய்து வருகிறார்
அதோடு, கட்சி பணிக்காக எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார். மேலும், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை அரவணைத்து செல்வதிலும் திறமையாக செயல்படுகிறார்” என்றார்.