தேர்தல் முடிந்து, குடியரசு துணைத் தலைவராக தேர்வாகும் வேட்பாளர், பதவியேற்ற நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக இப்பதவியில் நீடிப்பார்.
இந்திய அரசின் பல முக்கிய பதவிகளில், குறிப்பிட்ட வயது அல்லது ஏற்கெனவே தேர்வான நபர் பாதியில் பதவி விலகினால் அவருக்கு இன்னும் எத்தனை காலம் பதவி வழங்கப்பட்டதோ அதுவரையில், அப்பதவிக்கு புதிதாக தேர்வாகும் நபர் பொறுப்பு வகிப்பார்.
ஆனால், குடியரசு துணைத் தலைவர் பதவியின் கண்ணியம் மரியாதை கருதி, அப்பதவிலிருப்பவர் என்ன காரணங்களுக்காக அப்பதவியைவிட்டு விலகினாலும் அல்லது பதவியில் இருக்கும்போதே மறைந்தாலும், அவருக்கடுத்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்வாகும் நபர் முழுமையாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் நீடிக்க முடியும்!