பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி களைகட்டல்| After ten years, the ‘Fashion Festival’ returns to Chennai… the NIFT exhibition is buzzing with activity.

Spread the love

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இந்தத் துறையில் முக்கியமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு, ஃபேஷன் டிசைனிங், டிப்ளோமா இன் ஃபேஷன், ஜுவல்லரி டிசைன் (JD), ஃபேஷன் டெக்னாலஜி (FD) போன்ற பல்வேறு ஃபேஷன் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், குறிப்பாக ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அதிகமாகப் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வினை, தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.

இந்த ஃபேஷன் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, கைவினை, ஃபேஷன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கண்காட்சி நிச்சயமாக விருந்தாக அமைந்துள்ளது.

– தீபன் சேகுவேரா, அலமேலு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *