“பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்!’’ – உதயநிதி | udhayanidhi criticism at admk alliance in vandavasi constituency

Spread the love

`ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி

கீழ்பென்னாத்தூர் தொகுதி

சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார்.

இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அங்கு பேசுகையில், “இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *