இதுகுறித்து பிகேடிசியின் தலைவர் ஹேமந்த் துவேதி கூறுகையில், பத்ரிநாத், கேதார்நாத்துடன் அதன் துணைக் கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதோர் நுழைய முழுமையாக தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.
இதுகுறித்து உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் துவேதி கூறுகையில், “தேவபூமியான உத்தராகண்டின் மதம் மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பது முக்கிய கடமை. கேதார் கண்டம் முதல் மானஸ் கண்டம் வரையிலான கோயில் சங்கிலியில் பாரம்பரியமாக இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்குத் தடை இருந்தது.
ஆனால் உத்தராகண்டில் பாஜக அல்லாத அரசின் (காங்கிரஸ்) ஆட்சியில் இந்த மரபுகள் மீறப்பட்டுள்ளன. எனவே, இந்த மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுக்குரியவர். நாட்டின் முதல் மாநிலமாக இங்கு பொது சிவில் சட்டம் அமலாக்கம், கடுமையான கள்ளநோட்டு தடுப்புச் சட்டம் போன்ற நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவை” என்றார்.
பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு இந்துக்கள் அல்லாத ஏராளமானோர் சென்று வந்த நிலையில், உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
