பனிப்போரில் நாதக நிர்வாகிகள்; சீமானின் `டார்கெட்’ தொகுதியில் தொய்வடைகிறதா தேர்தல் பணிகள்? | Karaikudi Under Conflict: Senior NTK Leaders Holds a Cold War

Spread the love

2016–19 காலகட்டத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிக்குமரன். இருவருமே சீமானுக்கு நெருக்கம் என்றாலும் வெற்றிக்குமரன் கை ஓங்கியிருந்தது. ஒருகட்டத்தில் மாறனுக்கும் வெற்றிக்குமரனுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் மாறனுக்கு கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் கார்னர் செய்யப்பட்டார்.

நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன்

நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன்

மாறனுக்கு பதில், மாறனின் ஆதரவாளராக இருந்த சாயல்ராமுக்கு காரைக்குடி நா.த.க-வை கவனிக்கும் பொறுப்பை பெற்றுக் கொடுத்தார் வெற்றிக்குமரன். ஜூனியர் சாயல்ராமுக்கு கீழ் சீனியர் மாறனைப் பணியாற்ற வைத்ததால் கட்சி நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது வெற்றிக்குமரனை கடந்த 2021-ல் சீமான் கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மாறனும், சாயல்ராமும் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கிறார்கள். இருவருமே காரைக்குடி தொகுதியில் தனித்த செல்வாக்குடன் இருப்பதால் பனிப்போர் இன்னமும் நீடிக்கிறது” என்றனர்.

காரைக்குடி மாறன்

காரைக்குடி மாறன்

தொடர்ந்து பேசியவர்கள், “வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் இணைந்துதான் நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு காரைக்குடியில் நடந்தாலும் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நடத்தினார்கள். சாயல்ராமும், மாறனும் எதிரும் புதிருமாக இருந்ததே இதற்கு பின்னணி எனவும் சொல்லப்படுகிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *