பயணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம் | Malaysian flight makes emergency landing in Chennai after passenger suffers breathing difficulties

Spread the love

சென்னை: சவூதி அரேபி​யா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்​பூருக்கு 290 பயணி​களு​டன் மலேசி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் நேற்று முன்​தினம் இரவு சென்று கொண்டிருந்​தது. சென்னை வான் வெளியை கடந்து நடு​வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்​தில் இருந்த பெண் பயணி ஒரு​வருக்கு திடீரென மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது.

அந்த பயணிக்கு மருத்​துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்த விமானி, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை அதி​காரிக்கு தகவல் தெரி​வித்​தார். கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள் விமானத்தை சென்​னை​யில் தரை​யிறங்க அனு​மதி அளித்​தனர். இதையடுத்​து, நேற்று அதி​காலை 4.45 மணிக்கு சென்​னை​யில் விமானம் தரை​யிறங்​கியது.

தயார் நிலை​யில் இருந்த மருத்​துவ குழு​வினர், ஆக்​சிஜன் உள்​ளிட்ட மருத்​துவ உதவி​களை அவருக்கு வழங்​கினர். பின்​னர், பெண் பயணி சகஜ நிலைக்கு திரும்​பி​னார். இதனை தொடர்ந்​து, அதி​காலை 5.40 மணிக்​கு, மலேசி​யன் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம், சென்​னை​யில் இருந்து கோலாலம்​பூருக்கு புறப்​பட்டு சென்​றது. இதனால் சென்னை வி​மான நிலை​யத்​தில் சிறிது நேரம்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *