பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்  | Resolution passed at Grama Sabha meeting against Parandur Airport

1373243
Spread the love

காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு திருவள்ளூர் மாவட்​டங்​களில் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

சுதந்​திர தினத்தை முன்​னிட்டு காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கீழம்பி ஊராட்​சி​யில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

இந்த ஊராட்​சி​யில் 16 தீர்​மானங்​கள் வாசிக்​கப்​பட்​டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணி​யாளர்​களுக்கு பொன்​னாடை போர்த்தி கவுர​வித்​தார். பொது​மக்​களிடம் இருந்​தும் மனுக்​களை பெற்றார். இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட வரு​வாய் அலு​வலர் செ.வெங்​கடேஷ், காஞ்​சிபுரம் ஒன்​றிய குழுத்​தலை​வர் மலர்க்​கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்​தலை​வர் நித்​தியா சுகு​மார் உட்பட பலர் பங்​கேற்​றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்​பர​நாதர் கோயி​லில் சமபந்தி விருந்து நடை​பெற்​றது. இதில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஏகனாபுரம் கிராமத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்தை எதிர்த்து 1,100 நாட்​களாக போராடி வருகின்​றனர்.

இந்த திட்​டத்தை கைவிட வேண்​டும் என்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. காட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றி​யம், வீராபுரம் ஊராட்சியில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா சிறப்பு பார்​வை​யாள​ராக கலந்​து​கொண்​டு, கிராம மக்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

இந்த கூட்​டத்​தில் கிராம ஊராட்சி நிர்​வாகம் மற்​றும் பொது நிதி செல​வினம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. கிராம ஊராட்​சி​யின் தணிக்கை அறிக்கை கிராமசபை​யின் பார்​வைக்கு வைத்து ஒப்​புதல் பெறப்​பட்​டது. அதனைத் தொடர்ந்​து, கிராம பொது​மக்​கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழி​வுநீர் கால்​வாய், ஜி.எஸ்​.டி. சாலை​யில் நடை மேம்​பாலம் போன்ற பல்​வேறு கோரிக்​கைகளை ஆட்​சி​யரிடம் தெரி​வித்​தனர். ஆட்​சி​யர் இக்​கோரிக்​கைகளை உடனடி​யாக சரி செய்​வ​தாக உறு​தி​யளித்து சம்​பந்​தப்​பட்ட துறை அலு​வலர்​களுக்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தி​னார். மேலும், பொதுமக்கள் பேருந்து நிலை​யம் வேண்டி கோரிக்கை விடுத்​தனர்.

இக்​கோரிக்​கையை கேட்​டறிந்து எம்​.எல்.ஏ தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து உடனடி​யாக கட்​டித் தரு​வ​தாக அவர் தெரி​வித்​தார். இதே​போல் மாவட்​டம் முழு​வதும் 359 கிராம ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டங்​கள் நடை​பெற்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள 526 ஊராட்​சிகளில் பெரும்​பாலானவற்​றில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்​டம் நடை​பெற்​றது. திருத்​தணி அருகே தரணிவ​ராகபுரம் ஊராட்​சி​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், ஆட்​சி​யர் பிர​தாப் சிறப்பு பார்​வை​யாள​ராக பங்​கேற்​று, பொது​மக்​களிடம் கலந்​துரை​யாடி​னார்.

இக்​கூட்​டத்​தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்​குநர் ஜெயக்​கு​மார், உதவி இயக்​குநர் (ஊராட்​சிகள்) யுவ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். சோழ​வரம் அருகே அத்​திப்​பேடு ஊராட்​சி​யில், எண்​ணூர் – மாமல்​லபுரம் சாலைக்​காக அகற்​றப்​பட்ட ஊராட்சி மன்ற கட்​டிடம், கிராம சேவை கட்​டிடம் உள்​ளிட்ட 5 கட்​டிடங்​களை அமைக்க ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட இடத்​தில்​ உள்​ள ஆக்​கிரமிப்​பை அகற்​ற வரு​வாய்​ துறையினர்​ நடவடிக்​கை எடுக்​கவில்​லை எனக்​ கூறி, பொதுமக்​கள்​, கி​ராம சபை கூட்​டத்​தை புறக்​கணித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *