இந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும், 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர்.
பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!