சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆலப்புழையில் இருந்து மாா்ச் 10, 12, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.
இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.
இதேபோல, எா்ணாகுளத்தில் இருந்து மாா்ச் 10,12, 15 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.