சில நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், ஜொ்மனியில் இருந்து பரிசுப்பொருள், பணம் அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளாா். ஓரிரு நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், தான் அனுப்பிய பரிசுப் பொருள் சுங்க அதிகாரிகளிடம் உள்ளது. அதனை பெற பணம் செலுத்த வேண்டும். எனவே, தான் சொல்லும் வங்கி கணக்குக்கு ரூ.2.80 லட்சம் செலுத்தினால் அந்த பொருளை வாங்கி அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளாா். இதனை நம்பிய அந்த பெண், ரூ.2.80 லட்சத்தை அனுப்பினாராம். ஆனால் அந்த நபா் கூறியபடி பரிசுப்பொருள் வரவில்லை.
பரிசுப் பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் ரூ.2.80 லட்சம் மோசடி: இளைஞா் கைது
