பறவை காய்ச்சல் எதிரொலி, 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்   – Kumudam

Spread the love

சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து (Half-boil தவிர்க்கவும்) உண்ண வேண்டும், இறந்த பறவைகளை கைகளால் தொடக்கூடாது, மற்றும் காய்ச்சல்/மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்காவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் உள்ளிட்ட நாரைகள், கொக்குகளுக்கு உயிரிழந்தன. இந்த பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்த காரணத்தால், இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மற்ற பறவைகளுக்கும் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரகணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. பறவை உயிரிழந்திருப்பது சிறுவர் பூங்கா பார்வையாளர்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *