தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பளித்திருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியதோடு, பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே, மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தேதிகளிலிருந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், இதுவரை நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அந்த பத்து மசோதாக்களில் பல்கலை துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் உள்ளன. அதன்படி,