பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் – குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மறுநாள் மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

இதனையடுத்து அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மாற்று சமூகத்தினரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் கூறியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவிலேயே மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவியைக் கொன்றது ஏன்? என, போலீஸாரிடம் அவர் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “கடந்த 2020-ம் ஆண்டு, பருத்திக் காட்டில் பருத்தி பறித்துக் கொண்டிருந்த பாப்பா என்ற 65 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரது நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *