பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல் | 2 crore project to preserve the language of tribal people

1372538
Spread the love

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார்.

திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை ஆதி​தி​ரா​விடர்நலத் துறை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை கூடு​தல் செய​லா​ளர் உமாமகேஸ்​வரி தலைமை வகித்​தார். திண்​டுக்​கல் ஆட்​சி​யர் சரவணன் வரவேற்​றார். பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் அண்​ணாதுரை, திண்​டுக்​கல் எம்​.பி. சச்​சி​தானந்​தம், பழநிஎம்​எல்ஏ செந்​தில்​கு​மார், மாநில பழங்​குடி​யினர் நல வாரி​யத் தலை​வர் கனி​மொழி முன்​னிலை வகித்​தனர்.

பழங்​குடி மக்​களுக்​கான ‘தொல்​குடி’ இணை​யதளத்தை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: தொல்​குடி திட்​டத்​தின் முக்​கிய நோக்​கம் பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்​தவர்​களை கல்​வி,கலாச்​சா​ரம், பொருளா​தார மேம்​பாடு அடையச் செய்​வ​தாகும். பழங்​குடி​யின மக்​களின் வேளாண்பொருட்​களை மதிப்​புக் கூட்​டப்​பட்ட பொருட்​களாக உரு​வாக்​கி,சந்​தைப்​படுத்​த உதவிகள் செய்யப்படு​கின்​றன.

செயற்கை நுண்​ணறிவைப் பயன்​படுத்தி பழங்​குடி​யினரின் உரிமை​களைப் பாது​காப்​பது, எதிர்​காலத்தை தீர்​மானிப்​பது குறித்த ஆய்​வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பழங்​குடி​யினரின் மொழி மற்​றும் பண்​பாடு​களை இணை​ய​வழி​யில் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பழங்​குடி​யின மக்​களின் வாழ்​வியல் முறை​களைப் பாது​காப்​ப​தன் மூலம் இயற்​கைச் சூழலை​யும், அதன் மூலம் பூமித் தாயை​யும் பாது​காப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதையொட்டி நடை​பெற்ற கண்​காட்​சி​யில் பழங்​குடி மக்​களின் புகைப்​படம் மற்​றும் அவர்​கள் உற்​பத்தி செய்த பொருட்​கள் இடம் பெற்​றிருந்​தன. தொடர்ந்​து, பழங்​குடி​யின மக்​களின் கலை நிகழ்ச்​சிகள், கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *