இதில் திருச்செந்தூர் தொகுதி மட்டுமே பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பாஜக-வினர் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக முருகன் மாநாடு, வேல் யாத்திரை ஆகியவற்றை நடத்தி வரும் பாஜக-வினர், பழனி தொகுதி இந்த முறை தங்களுக்குத்தான் ஒதுக்குவார்கள் எனச் சொல்லி வந்தனர்.

இந்நிலையில் பழனி சட்டமன்றத் தொகுதி தங்களுக்கு அறிவிக்கபடாததால் விரக்தியடைந்து இன்று காலை சாலையில் கூடிய பாஜகவி-னர், “பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பியதோடு தேங்காய்களை உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.