இந்நிலையில், கடந்த அக். 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்.16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், நவ.18-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்றும முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த அக்.16-ம் தேதி அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.