பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சென்னையில் இன்று 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் | today 72 hour hunger strike in Chennai demanding implementation of old pension scheme

1370435
Spread the love

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தியம் உட்பட 4 முக்​கிய கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி, சென்னை​யில் 72 மணிநேர உண்​ணா​விரத போராட்​டம் இன்று தொடங்​கு​கிறது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில், புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்து விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்படுத்​து​வது, ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக அமைக்​கப்​பட்ட அலு​வலர் குழுவை திரும்​பப் பெறு​வது, பணிக்​கொடை, குடும்ப ஓய்​வூ​தி​யம் வழங்​கு​வது ஆகிய 4 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்​னை​யில் 72 மணி நேர உண்​ணா​விரத போராட்​டம் இன்று (23-ம் தேதி) தொடங்​கு​கிறது.

சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்​கும் இந்த போராட்​டம் 26-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்​ளது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் எஸ்​.ஜெய​ராஜ​ராஜேஸ்​வரன் தலை​மை​யில் நடை​பெறும் இந்த போராட்​டத்தை தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றிய மாநில தலை​வர் த.அமிர்​தகு​மார் தொடங்கி வைக்​கிறார்.

மாநில ஒருங்கிணைப்​பாளர்​கள் பி.ஃபிரெட்​ரிக் எங்​கெல்​ஸ், எம்​.செல்​வகு​மார் ஆகியோர் கோரிக்கை விளக்​க​வுரை ஆற்றுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *