“அரசு வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்க்கையில் கவலையே இல்லை” என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் (OPS) இல்லாத இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான அரசு ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரே கேள்வி… “என் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு NPS (National Pension System) மூலம் கிடைக்கும் மாத பென்ஷன், என் குடும்பத்தின் அன்றாடச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும் போதுமானதாக இருக்குமா?” என்பதுதான்.
ரமேஷுக்கு 52 வயது, ஓர் அரசு அதிகாரி. அவர் சம்பாதிக்கும் பணம் குடும்பச் செலவுக்கே சரியாகப் போய்விடுகிறது. பி.எஃப் (PF) மற்றும் NPS-ல் பணம் சேர்கிறது என்ற ஒரே நிம்மதியில் இருக்கிறார். ஆனால் நிஜம் என்னவென்றால், 60 வயதில் ஓய்வு பெறும்போது கையில் கிடைக்கும் அந்தத் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த 20-25 வருடங்களை ஓட்டுவது சாதாரண காரியமல்ல.
பல அரசு ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு — ஓய்வுக்கால வருமானத்துக்காக தங்களின் NPS பணத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பது. இடையில் கிடைக்கும் நிலுவைத் தொகைகள் (Arrears), போனஸ் அல்லது வங்கியில் சும்மா தூங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்புகளை, எந்த வளர்ச்சியும் இல்லாத சாதாரணத் திட்டங்களில் விட்டுவிடுகிறார்கள். இதனால், 55 வயதில் எதிர்பாராத மருத்துவச் செலவோ, பிள்ளைகளின் திருமணமோ வந்தால், கையில் போதுமான பணமில்லாமல் தவிக்கிறார்கள்.
உங்கள் ஓய்வுக்காலத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற, நீங்கள் 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. அரசு தரும் பென்ஷனைத் தாண்டி, உங்களுக்கான ஒரு “இணை பென்ஷனை’ (Parallel Pension) நீங்களே இப்போதே உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்குப் பேருதவியாக இருப்பதுதான் — மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் Lumpsum (மொத்த முதலீடு) + SWP (Systematic Withdrawal Plan) ஃபார்முலா!
உங்களிடம் தற்போது சும்மா இருக்கும் ஒரு மொத்தத் தொகையை (Lumpsum) பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய நல்ல ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிடுங்கள். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தொகையை SWP (Systematic Withdrawal Plan) முறையில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும்படி செட் செய்து கொள்ளுங்கள்.
உங்களிடம் ஒரு மொத்தத் தொகை (Lumpsum) உள்ளது. அது 10% வருமானம் தரும் ஃபண்டில் வளர்வதாக வைத்துக்கொள்வோம்.
* முதல் வருடம் அதிலிருந்து 5% பணத்தை (SWP) எடுக்கிறீர்கள்.
* விலைவாசி உயர்வைச் சமாளிக்க, ஒவ்வோர் ஆண்டும் எடுக்கும் தொகையை 6% கூட்டிக்கொண்டே போகிறீர்கள் (Step-Up SWP).
* இப்படி 25 வருடங்கள் தொடர்ந்து பணம் எடுத்தாலும், இறுதியில் காம்பவுண்டிங் (Compounding) எப்படிப் பெரிய செல்வத்தை உருவாக்குகிறது என்று பாருங்கள்:
இதனால் என்ன லாபம்? நிம்மதி எப்படி கிடைக்கும்?
இந்த SWP முறை மூலம், 60 வயதிற்கு முன்பே கூட உங்களால் ஒரு நிலையான மாத வருமானத்தை உருவாக்க முடியும்! ஒருபக்கம் உங்களின் NPS பணம் முதிர்ச்சியடைந்து பாதுகாப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கம், இந்த Lumpsum + SWP முதலீடு உங்களுக்கு மாதாமாதம் ஒரு பென்ஷன் போல அமைதியாகக் கைகொடுக்கும்.
-
பணவீக்கத்தை முறியடிக்கலாம்: நீங்கள் எடுக்கும் பணம் போக, மீதமுள்ள அசல் முதலீடு சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்துகொண்டே இருக்கும்.
-
பயமற்ற வாழ்க்கை: 58 வயதிலேயே நீங்கள் விருப்ப ஓய்வு (VRS) பெற நினைத்தால்கூட, “ஐயோ, மாதாந்திரச் செலவுக்கு என்ன செய்வது?” என்ற பணக்கவலையின்றி தைரியமாக முடிவெடுக்கலாம். இதுதான் ஓர் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் உண்மையான நிதிச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு!
இதைச் சரியாகத் திட்டமிடுவது எப்படி?
“என்னிடம் உள்ள சேமிப்பை வைத்து எவ்வளவு தொகையை Lumpsum ஆக முதலீடு செய்வது? அதிலிருந்து மாதம் எவ்வளவு SWP எடுக்கலாம்? என் NPS பணத்தோடு இதை எப்படி இணைத்துத் திட்டமிடுவது?”
இதுபோன்ற உங்களின் அனைத்துக் குழப்பங்களுக்கும், நடைமுறை உதாரணங்களுடன் விடையளிக்க வருகிறது இந்தச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்தி உங்களின் ஓய்வுக்காலத்தை எப்படி மன அமைதியுடன் (Peaceful Retirement) வடிவமைப்பது என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

தலைப்பு: நிம்மதியான ஓய்வுக்காலம், கேரண்டி! – அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஆன்லைன் வழிகாட்டல் (Special Online Session for Government Employees)
நாள்: 25 பிப்ரவரி 2026, புதன்கிழமை
பேச்சாளர்: ஏ.ஆர். குமார் (Chief of Content, Labham & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்)
🎁 மெகா போனஸ்: இலவச ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்!
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் ‘Free Retirement Calculator Tool’ முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதைக் கொண்டு உங்கள் எதிர்காலத் தேவைகளை நீங்களே சுலபமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்!
உழைத்த காலம் போதும்… இனி உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க விடுங்கள்! எந்த ஓர் அரசுத் திட்டத்தின் பரிந்துரையும் இன்றி, அக்மார்க் முதலீட்டு உத்திகளை மட்டுமே கற்றுத்தரும் இந்த நிகழ்ச்சியில் இன்றே பதிவு செய்யுங்கள்.
ஆன்லைன் நிகழ்ச்சியில் 75 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் இல்லை. முன்பதிவு கட்டாயம். பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-feb25-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb25_2026