இதைதொடர்ந்து ஒரத்தநாடு டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் துப்பு கிடைக்காததால் சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடினர். இதில் சென்னை திருவெற்றியூர், நெல்லிக்காரன் தெருவை சேர்ந்த பொன்சுரேஷ், சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மணிகண்டன், கோயமுத்துார் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவான மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை கும்பலிடமிருந்து ரூ.9.35 லட்சம் ஒரு காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். !
”பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை”- 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!