ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிய, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.