போட்டியாக ராமர் கோயில்
பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார்.
முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார்.
அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்டது
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.