பாமகவை கைப்பற்றத் துடிக்கிறார் அன்புமணி: ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு | Ramadoss accuses Anbumani is trying to take over the PMK

1372322
Spread the love

விழுப்புரம்: வஞ்​சனை​யால் பாமகவை கைப்​பற்​றத் துடிக்​கிறார் அன்​புமணி என்று கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் நேற்று கூறிய​தாவது: தைலாபுரம் வரும் அன்​புமணி தாயை மட்​டும் பார்த்​து​விட்​டு, என்​னிடம் பேசாமல் செல்​கிறார். மாற்று கட்​சி​யில் இருந்து வந்த வழக்​கறிஞர் ஒரு​வர் என்னை ‘ராம​தாஸ்’ என்று அழைக்​கிறார். ‘அய்​யா’ என்று சொன்​னவர்​களை ராம​தாஸ் என்று சொல்​ல​வைத்​தது அன்​புமணி​தான்.

வஞ்​சனை, சூது ஆகியவை மூலம் பாமகவை கைப்​பற்​றி, ‘நான்​தான் இனி பாமக’ என்று சொல்​லத் துடிக்​கிறார் அன்​புமணி. அவரது தலை​வர் பதவி மே மாதத்​துடன் காலா​வ​தி​யாகி​விட்​டது. எனக்​குத் தெரி​யாமல் உள்​ளடி வேலை செய்​துள்​ளார். என் படத்​தைப் போட்டு, எனது ஆதர​வாளர்​களை அவர் பக்​கம் இழுக்​கிறார்.

தண்​ணீருக்​குப் பதிலாக வியர்​வையை ஊற்​றி, பாமக எனும் ஆலமரத்தை உரு​வாக்​கினேன். அந்த ஆலமரத்​தில் இருந்து ஒருகிளையை வெட்டி கோடாரி செய்​து, அந்​தக் கோடாரி​யால் மரத்​தையே வெட்ட முயற்​சிக்​கிறார். பணத்​தால் கட்​சிப் பொறுப்பாளர்​களை விலைக்கு வாங்​கி​யுள்​ளார். அன்​புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்​காததற்கு காரணம், அப்​படிச் செய்​தால், அவர் கட்​சி​யின் பொறுப்​பாளர் மற்​றும் தொண்​டர்​களை அதல பாதாளத்​தில் தள்​ளி​விடு​வார்.

வரும் 17-ம் தேதி கட்​சி​யின் பொதுக்​குழுவை கூட்​டி​உள்​ளேன். வரும் 9-ம் தேதி போட்டி பொதுக்​குழுவை நடத்​துகிறார். பாமக இரண்டாக பிரிந்​து​விட்​டதைப்​போல மக்​களிடம் மாயத் தோற்றத்தை ஏற்​படுத்​தி​விட்​டார். குடும்​பத்​துக்கு உள்​ளே​யும் பணத்தை வைத்து விளை​யாட முடி​யும் என்று கருதுகிறார்.

தைலாபுரம்​தான் பாமக தலைமை அலு​வல​கம். இது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் எழு​தி​யுள்​ளோம். சட்ட நடவடிக் கை​யில் எங்​களுக்கு வெற்றி கிடைக்​கும். அன்​புமணி​யின் பொய் வார்த்​தைகளை நம்பி அவருடன் சென்​றவர்​கள், என்​னிடம் திரும்பி வர வேண்​டும். அவ்​வாறு வரும்​போது பாசத்​துடன் அரவணைத்​துக் கொள்​வேன். இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *