பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது | anbumani supporters arrested for attack on supporters of Pmk mla arul

Spread the love

சேலம்: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய சம்​பவத்​தில், அன்​புமணி ஆதர​வாளர்​கள் 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலம் அருகே வாழப்​பாடி வடு​கநத்​தம்​பட்​டியைச் சேர்ந்த ராம​தாஸ் ஆதர​வாளர் சத்​ய​ராஜின் தந்தை தர்​ம​ராஜ் இறு​திச்சடங்​கில் கலந்து கொண்​டு, பாமக எம்​எல்ஏ அருள் மற்​றும் ஆதர​வாளர்​கள் காரில் திரும்​பிக் கொண்டிருந்தனர்.

வழி​யில் காரை வழிமறித்த அன்​புமணி ஆதர​வாளர்​கள் கும்​பல், அருள் எம்​எல்ஏ ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கார் கண்​ணாடிகள் உடைக்​கப்​பட்​டு, 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதுதொடர்​பாக ராம​தாஸ் அணி​யின் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் நடராஜ், ஏத்​தாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன்​படி, ஏத்​தாப்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

தொடர்ந்​து, சின்ன கிருஷ்ணாபுரம் பூவிழி ராஜா (33), வடு​கத்​தம்​பட்டி விக்​னேஷ் (25), ஆத்​தூர் தென்​னங்​குடி​பாளை​யத்​தைச் சேர்ந்த பாமக ஆத்​தூர்வடக்கு ஒன்​றிய துணைச் செய​லா​ளர் வெங்​கடேசன் (37), வாழப்​பாடி செல்​லி​யம்​மன் கோயில் பகுதி சரவணன் (30), வைத்​தி​ய க​வுண்​டன் புதூர் அருள்​மணி (32), சின்ன கிருஷ்ணாபுரம் விமல் ராஜ் (22 ), தமிழ்ச்​செல்​வன் (29) ஆகிய 7 பேரை கைது செய்​துள்​ளனர். மேலும் சிலரைத் தேடி வரு​கின்​றனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவ.19-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *