பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

Dinamani2f2024 12 282fo5nutw8d2fpmk.png
Spread the love

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேடையில் ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

ராமதாஸ்: பாமக இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அன்புமணிக்கு உதவியாக என்றார்.

அன்புமணி: எனக்கா…

ராமதாஸ்: ஆமாம்

அன்புமணி: வேண்டாம். கட்சியில் 4 மாதத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கிறார். இளைஞரணி அணித் தலைவர் பதவி என்றால். அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிங்க என்றார்.

ராமதாஸ்: யாராக இருந்தாலும் நான் சொல்வதைதான் கேட்கணும். கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *