புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.
சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக அமெரிக்க ஏற்றுமதி வணிகத்திற்கான எதிர்பார்ப்பு குறித்து நிறுவனம் எச்சரிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ரூ.174 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இருப்பினும், மொத்த வருமானம் முதல் காலாண்டில் ரூ.3,958 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,158 கோடியாக இருந்தது என்று பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.