பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Dinamani2f2025 01 052fmivd02zm2fcricket.jpg
Spread the love

பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் கோப்பையை இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் – காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் நவ. 22-ல் தொடங்கியது.

கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படும் தொடராக பாா்டர் – காவஸ்கர் கோப்பை (பிஜிடி) உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்தது.

முன்னதாக, 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், சிட்னியில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

2ஆவது இன்னிங்ஸில்  162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் பாா்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றதன்மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தெனாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *