இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதலைக் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது.
இந்தத் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரத்தோடு உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் தப்பி வாழும் மக்களையும் மீண்டும் மேலே எழும்பவிடாமல் தடுக்கப்படுகிறது.
இருந்தும் பாலஸ்தீன மக்கள் தங்களது முயற்சிகளை கைவிடவில்லை. தொடர்ந்து அவர்கள் தங்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய காசாவில் அல் சஹ்ரா நகரத்தில் உள்ள மணல் குன்றுகளில் இளைஞர்கள் திரண்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது இப்போது தான் தொடங்கியது அல்ல.
2023-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்தில் போர் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அல் சஹ்ரா நகரத்தில் உள்ள மணல் குன்றுகளில் நடந்து வந்த ஒன்றுதான் இது.
இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.