பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது.
சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
காமராசுவின் தகவல்படி,
வரி பாக்கி வைத்திருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு:
இந்தியா சிமெண்ட் லிட்., சங்கர் நகர் நிலுவைத் தொகை: ரூ.3,83,12,674
டி.சி.டபிள்யூ லிட்., சாஹுபுரம் – நிலுவைத் தொகை: ரூ.28,06,98,364
3 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) – நிலுவைத் தொகை: ரூ.10,15,33,121
20 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) – நிலுவைத் தொகை: ரூ. 2,04,34,44,554