சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் சபரி.
அர்ச்சனாவைத் தொடர்ந்து, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் கோப்பையை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் திவ்யா.
இறுதிப் போட்டியாளர்களின் பலமும் பலவீனமும்!
இந்த வெற்றிக்கு திவ்யா தகுதியானவரா, PR டீமிற்கு கிடைத்த வெற்றியா என்று பல விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் இதுதான் முடிவு. இது மக்கள் அளித்த வாக்குகளின் படி நிகழ்ந்ததா அல்லது பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
என்னுடைய தனிப்பட்ட நோக்கில், விக்ரம் அல்லது சபரிக்கு கோப்பை அளிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பேன்.
ரொமான்ஸிலும் சண்டைகளிலும் வீழ்ந்திருந்த அரோ, ஒரு கட்டத்தில்தான் விழித்துக் கொண்டார். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை.
முதல் வாரத்தில் பிரகாசித்த சபரி, பின்பு செட் பிராப்பர்ட்டி போல ஆகிப் போனார். பாருவுடன் மோதி குறும்படம் மூலம் அச்சப்பட்டு அப்படியே பின்தங்கிப் போனார். ‘கார் டாஸ்க் தியாகத்தின்’ மூலம் மீண்டெழுந்தாலும் கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் சபரியிடம் ஒரு consistency இருந்தது. யாரிடமும் அநாவசியமான சண்டைக்குச் செல்லவில்லை. ஏற்படுகிற சண்டைகளையும் தீர்ப்பவராக இருந்தார். (ஆனால் நல்லதுக்குத்தான் காலமே இல்லையே!)
விக்ரம் இந்த சீசனின் சிறந்த ஆட்டக்காரர். பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றோடு பல டாஸ்க்குகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். சான்ட்ராவும் திவ்யாவும் இவருக்கு தந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொண்டவர்.