இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
நாமினேஷன் பட்டியலில் ரம்யா, சாண்ட்ரா, வியானா, எஃப்.ஜே உள்ளிட்டோர் இருந்த நிலையில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேறலாம் என்ற ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது.
அதன்படி எஃப்.ஜே. ரம்யா, வியானா மூன்று பேருமே இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் ஒருவர் இன்றைய எபிசோடிலேயே கூட அனுப்பப் பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மூன்று பேரும் வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன் எனச் சொல்லலாம்.!