பிங்க் பந்தினை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை; முன்னாள் கேப்டன் அதிருப்தி!

Dinamani2f2024 12 062f6itlle0v2findia Aa.jpg
Spread the love

பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *