பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு | owners announce omni buses will not operate between states until the issue is resolved

Spread the love

சென்னை: தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளா​வுக்கு சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது. இதே​போல், கடந்த 7 நாட்​களாக கர்​நாடக போக்​கு​வரத்து துறை​யும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை தடுத்து ஒவ்​வொரு பேருந்​துக்​கும் ரூ. 2.20 லட்​சம் வரை அபராதம் விதித்​தது.

இதுகுறித்து பேருந்து உரிமை​யாளர்​கள் கேட்​ட​போது, ‘‘2021-ம் ஆண்டு மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட ‘ஆல் இந்​தியா டூரிஸ்ட் பெர்​மிட்​’ படி தமிழகத்​தில் அண்டை மாநில பேருந்​துகளுக்கு சாலை வரி வசூலிக்​கப்​படு​கிறது. எனவே, நாங்​களும் வசூலிக்​கிறோம்’’ என கேரள, கர்​நாடக போக்​கு​வரத்​துறை​யினர் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, புதுச்​சேரி இடையே இயக்​கப்​பட்டு வரும் ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என்று அந்​தந்த மாநில ஆம்னி பேருந்​துகளின் உரிமை​யாளர்​கள் சங்​கம் கூட்​டாக அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து, ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் கூறும்​போது, ‘‘மாநிலங்​களுக்கு இடையே இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகளுக்கு காலாண்​டுக்கு தமிழக சாலை​வரி ரூ.1,50,000, ஆல் இந்​தியா டூரிஸ்ட் பெர்​மிட் சாலை வரி ரூ.90,000 மற்​றும் கேரளா, கர்​நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்​சம் என மொத்​தம் ரூ.4.50 லட்​சம் செலுத்தி பேருந்​துகளை இயக்க முடி​யாத சூழ்​நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளோம். ஆம்னி பேருந்​துகளுக்கு தனித்​து​வ​மான பெர்​மிட்டை மத்​திய அரசு வழங்க வேண்​டும்.

வரித்​திருத்​தங்​கள் மேற்​கொள்ள வேண்​டும் என்​பதே எங்​கள் கோரிக்​கை. தமிழக அரசு இந்த பிரச்​சினை​யில் தலை​யிட்டு நிரந்தர தீர்வு கான வேண்​டும்” என்​றனர். இதனிடையே, தமிழக போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கரை ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் நேற்று சந்​தித்து கோரிக்​கைகளை முன்​வைத்​தனர். இதுகுறித்து அதி​காரி​களு​டன் கலந்து ஆலோ​சிப்​ப​தாக அமைச்​சர் தெரி​வித்​தார். இந்த பிரச்​சினைக்கு தீர்வு எட்​டப்​ப​டாத நிலை​யில், அரசுடன் பேச்​சு​வார்த்தை தொடர்​வ​தால் இனி மாநிலங்​களுக்கு இடையே ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது.

மாநிலத்​துக்​குள் மட்​டுமே பேருந்​துகள் இயக்​கப்​படும் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் தெரி​வித்​தனர். பயணி​களின் வசதிக்​காக, அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் மூலம் ஆந்​தி​ரா​வுக்கு 70 பேருந்​துகளும், கர்​நாடகா​வுக்கு 183 பேருந்​துகளும், கேரளா​வுக்கு 85 பேருந்​துகளும் இயக்க பெரிமிட் உள்​ளது. தேவை இருக்​கும் பட்​சத்​தில் கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படும் என அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *