ஏப்ரல் 16 முதல் மே 15 வரை கர்நாடகா, ஒடிசா, அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, லட்சத்தீவு, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், மே 1 முதல் மே 30 வரை ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெறும்.
இந்த கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கணக்கெடுப்பாளர்கள் காகிதங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்யேக மொபைல் செயலி மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள்.

இந்தச் செயலி மற்றும் சுய-கணக்கெடுப்பு இணையதளம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும், கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் இந்த டிஜிட்டல் முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.