அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன.
ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.
தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன.

ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது.
அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது” என்றார்.
இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின.
இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது.