1. ஓர் இழப்பு ஏற்பட்டால் முதலில் மனதளவில் அதிர்ச்சி ஏற்படும்.
2. பின் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை ஏற்றுக்கொள்ள மனது மறுக்க ஆரம்பிக்கும்.
3. அதன் பின் கோபம் வரும். பின் கோபம் குறைந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்ச ஆரம்பிப்போம். அதில் தோற்கும் போதுதான் அவர்கள் இனி நம்மவர் இல்லை என்பதை முழுவதுமாக மனது ஏற்றுக்கொள்ளும். இந்த மனப்பக்குவம் சிலருக்கு ஒரு வாரத்தில் வரலாம். சிலருக்கு ஒரு மாதத்தில் வரலாம். சிலருக்கு சில ஆண்டுகளில் வரலாம். சிலருக்கு கடைசி வரை வராமல் அந்த நபரின் நினைவிலேயே வாழ ஆரம்பிப்பார்கள்.
அதிர்ச்சி, மறுப்பு இரண்டுமே பாதிக்கப்பட்டவர் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மறுப்பு படிநிலையில் இருக்கும் போதுதான் பிரேக் அப் செய்தவரின் வாட்ஸ் அப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பது, ஸ்டேட்டஸ் செக் செய்வது, லாஸ்ட் சீன் செக் செய்வது போன்ற எண்ணங்கள் எல்லாம் வரும்.

4. அடுத்த படிநிலை கோபம். இதில்சிலர் தன்னைத்தானே வருத்திக் கொள்வார்கள். உதாரணமாக தாடி வளர்ப்பது, கைகளை கட் செய்து கொள்வது, சாப்பிடாமல் பட்டினி கிடப்பது போன்றவற்றை சொல்லலாம். இன்னும் சிலர் மற்றவர்களிடம் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.
5.அதன் பின் வரக்கூடியது கெஞ்சுதல் படிநிலை. நடந்த எல்லா பிரச்னைகளிலும் தவறை தனதாக்கிக் கொண்டு பிரேக் அப் செய்தவருடன் சேர்வதற்காக அவர்களை கெஞ்சுதல்.
6. இந்த சூழல் வரும்போது சுயமரியாதையை இழந்துகூட சம்பந்தப்பட்ட நபரை தன் வாழ்க்கையில் இருக்க வைக்க பார்ப்பார்கள். அதன்பின் வெறுப்பு ஏற்பட்டு அந்த நபரை மறந்து வாழ ஆரம்பிப்பார்கள்.